மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலை மலை மானசரோவர் யாத்திரை பற்றிய பல்வேறு தகவல்களை தாங்கள் இந்த இணைய தளத்தில் காணலாம்

Monday, July 11, 2011

திருக்கயிலாய தரிசனம் 2005- 3

வாமதேவ முக தரிசனம்

வாம தேவ முகம்: மாதர் முகம் போல் ஆபரணமணிந்து வெட்சிபூ நிறமாய் இடத்தோளின் மீது வடக்கு நோக்கி இருக்கும் முகம், பஞ்ச பூதங்களில் நீரை குறிக்கின்றது. ஐந்தொழிலில் காத்தல் தொழிலைக் ( விஷ்ணு ஸ்திதி காரண முகம்) குறிக்கின்றது. ஐந்தெழுத்தில் 'ம'. அம்மை ஆதி சக்தி .”

கையிலங்கிரியிலே மிகவும் ஸ்பஷ்டமாய் தரிசனம் தரும் முகம் இம்முகம். மேலே நாகம் குடைப்பிடிக்க இடப்பக்கத்தில் அம்மையையும் அப்பரும் சிவ சக்தியாக தரிசனம் தரும் முகம் இதுதான். முக்கண் முதல்வரையும் மலையரசன் தன் பொற்பாவையையும் ஒரு சேர இம்முகத்திலே தரிசனம் செய்கின்றோம். கயிலாயம் என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் முகமும் இதுதான்.

இம்முகத்தை

வாமதேவாய நமோ ஜ்யேஷ்டாய நம: ஸ்ரேஷ்டாய நமோ ருத்ராய நம: காலாய நம: கலவிகரணாய நமோ பலவிகரணாய நமோ பலாய நமோ பலப்ரமதாய நமஸ்-ஸர்வ-பூததமநாய நமோ மநோந் மநாய நம:

என்னும் உத்தர வக்த்ர ப்ரதி பாதக மந்திரத்தால் துதி செய்கிறோம்


சிவ சக்தி பாதத்திலிருந்து பெருகி ஓடி வரும் ஆறு



சிவ சக்தி தரிசனம்




நாகக் குடை எம்பெருமானுக்கு



வடக்கு முகமாம் வாமதேவ முகத்தின் சில அருகாமைக் காட்சிகள்.

No comments:

Post a Comment