இந்தப்பதிவில் வடக்கு முகமான வாமதேவமுகத்தின் அதிகாலை தரிசனம் கண்டு களிக்கலாம் அன்பர்களே.

வேத வர்ணேஸ்வராக எம்பெருமான்
வாமதேவாய நமோ ஜ்யேஷ்டாய நம: ஸ்ரேஷ்டாய நமோ ருத்ராய நம:
காலாய நம: கலவிகரணாய நமோ பலவிகரணாய நமோ பலாய நமோ
பலப்ரமதாய நமஸ்-ஸர்வ-பூததமநாய நமோ மநோந் மநாய நம:

அதை இந்திர ஜாலம் என்பதா மகேந்திர ஜாலம் என்பதா? முதலில் சூரியனின் காலைக்கதிர்கள் எம்பெருமானின் முடியில் உள்ள நாக படத்தை மட்டும் சிவப்பாக்கினான், பின் நேரம் செல்ல செல்ல அப்படியே அது கீழே நகர்ந்தது, சில நிமிடங்களில் முகம் முழுவதும் சிவப்பு நிறமாகி விட்டது, பின் அப்படியே தங்க வர்ணம், இன்னும் சிறிது நேரத்திற்கு பின் முன் போல து‘ய வெள்ளை நிறமாகி விட்டது. ஸ்ரீ ருத்ரத்திலே வருகின்ற
அஸெள யஸ்தாம்ரோ அருண உத பப்ரு: ஸ”மங்கல: யே சேமாகும் ருத்ரா அபிதோ திக்ஷ” ஸ்ரிதா: ஸஹஸ்ரஸோ -வைஷாகும்-ஹேட ஈம:
( சூரியனைப் போல எம்பெருமான் காலையில் தாமிர சிவப்பு வர்ணத்தில் காட்சி தரும் எம்பிரான் பின் சிறிது நிறம் மாறி சிவப்பு நிறமாகி(அருண) பின் தங்க வர்ணம் ஆகின்றார், அவர் தனது ஆயிரம் கதிர்களால் உலகமெங்கும் பரவி நம்முடைய அறியாமை இருளை நீக்குகின்றார், அவர் மங்கள வடிவினர், இவ்வாறு ஆயிரம் ருத்ரர்களாக விளங்கும் சிவ—ருமானை அடி வீழ்ந்து வணங்குகின்றோம்.) என்ற மந்திரத்திற்கு அருமையான விளக்கத்தை அளித்தார் எம்பெருமான் இந்த வாமதேவ முக வர்ண ஜாலத்தால்.






nice pictures
ReplyDeleteThnak you Arul
ReplyDelete