மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலை மலை மானசரோவர் யாத்திரை பற்றிய பல்வேறு தகவல்களை தாங்கள் இந்த இணைய தளத்தில் காணலாம்

Saturday, July 16, 2011

திருக்கயிலாய தரிசனம் 2005- 9







சத்யோஜாதம்: அரசம் பூ போல் வெண்மை நிறமாய் பிடரியில் மேற்கு நோக்கி இருக்கும் முகம். பஞ்ச பூதங்களில் பூமியை குறிக்கின்றது , ஐந்தொழிலில் படைத்தல் தொழிலைக் குறிக்கின்றது (பிரம்ம ஸ்ருஷ்டி காரண முகம்). ஐந்தெழுத்தில் 'ந'.



முதல் நாள் கிரி வலம் செய்யும் போது இம்முக தரிசனம் நன்றாக கிடைக்கின்றது. மற்ற முகங்கள் குவிந்து உள்ளன ஆனால் இம்முகம் மட்டும் குழியாக உள் வாங்கி இருக்கின்றது. இம்முகத்தை திருமயிலையிலே கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.





ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி ஸத்யோஜாதாய வை நமோ நம:

பவேபவே நாதிபவே பவஸ்வ மாம் பவோத் பவாய நம:

என்னும் பஸ்சிம வக்த்ர ப்ரதி பாதக மந்திரத்தால் துதி செய்கின்றோம்.










No comments:

Post a Comment