மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலை மலை மானசரோவர் யாத்திரை பற்றிய பல்வேறு தகவல்களை தாங்கள் இந்த இணைய தளத்தில் காணலாம்

Friday, August 12, 2011

திருக்கயிலாய தரிசனம் 2005- 18

மலை வளம் மற்றும் நீர் வளம் கண்டோம் இனி மலர் வளம் காண்போம்.




தாருசூலாவை நெருங்கும் போது பயணம் செய்யும் பேருந்தை நணைக்கும் நீர் வீழ்ச்சிகள் அடுத்த நாள், நம்மையும் நனைக்கின்றன. களைத்து வரும் தன் அன்பர்களை அந்த ஆண்டவன் தனது அமுத தாரைகளால் ஆசிர்வாதம் செய்வது போல் உள்ளது.










உச்சியிலிருந்து அப்படியே வர்ஷிக்கும் அழகு நீர் வீழ்ச்சி.




செல்லும் வழியில் நீர் வீழ்ச்சியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலம்.







ஆதி கைலாயம் பின் புறத்தில் அமைதியாய் ஓடி வரும் காளி நதி.










தாருசூலாவில் காளி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நட்புப்பாலம், இந்தியாவையும் நேபாளத்தையும் இனைக்கின்றது.




அகண்ட காளி நதி
வெள்ளிக்கம்பி நீர்வீழ்ச்சி










மற்றொரு சங்கமம்




ஆக்ரோஷமாய் பாயும் காளி நதி




பங்லா நீர்வீழ்ச்சி நிலச்சரிவு ஏற்பட்ட இடம்




காளி நதி சாந்தமாய் பாயும் அழகு




நடந்து செல்லும் தொங்கும் பாறை வழி, நீர் வீழ்ச்சி, காளி நதி மூன்றும்








வழியிலேதான் எத்தனை விதமான நீர் வீழ்ச்சிகள், வெள்ளிக் கம்பி போல் மெல்லியதாக், அகண்டதாய், பல்வேறு பிரிவுகளாய், வர்ணிக்கவார்த்தைகளே இல்லை, சிலவற்றை கண்டு களியுங்கள்.




காளி நதியின் நீர் வீழ்ச்சி









காளி மற்றும் டிங்கர் நதிகளின் சங்கமம்







நடைப்பயணம் இந்திய நேபாள இயற்கை எல்லையான காளி நதியின் கரையோரமாக. காளி நதி சிறு ஊற்றாக முக்கூடலாம் நபிதாங்கில் உற்பத்தியாகி, காளி குளத்திலிருந்து தண்ணீரைப் பெற்று வழியெங்கும் பல் வேறு சிற்றாறுகள் சங்கமம் ஆகி ஆக்ரோஷத்துடன் பாயும் அழகையும், காளி நதியில் இனையுன் பல்வேறு நீர் வீழ்ச்சிகளையும் கண்டு களியுங்கள்.


1 comment: